சினிமா துறையை பொறுத்தவரை போதை பொருள் வழக்கில் சிக்குவது தொடர் கதையாகி தான் வருகிறது. ஹிந்தியில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் அவரது மரணத்தில் போதை பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக திடீரென்று தகவல் வெளியானது விசாரணையில் அம்பலமானது.
அதில், ஏராளமான முன்னணி நடிகைகளும் நடிகர்களும் சிக்கினர். தெலுங்கு திரையுலகில் அதேபோல் போதைப்பொருள் தலைதூக்கி உள்ளதாக தற்போது தகவல் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தயாரிப்பாளர் கே பி சவுத்ரி என்பவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து, அவரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவருடன் ஏராளமான நடிகைகளும் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. ஜோதி மற்றும் சுரேகா வாணி ஆகியோருடன் கே பி சவுத்ரி போனில் அதிக அளவில் உரையாடியதும் விசாரணையில் அம்பலமானது. சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதான கே பி சவுத்ரியுடன் நடிகை சுரேகா வாணியும் அவரது மகள் சுப்ரீதா ஆகியோர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படி போதை பொருள் விவகாரம் டோலிவுட்டில் சூடுபிடித்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளரான சந்திரசேகர் தனது மனைவி நமிதா போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக பரபரப்பாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி போதைப்பொருள் வியாபாரியாக உள்ள லக்ஷ்மிஷ் பிரபு உடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருந்ததாகவும், ஒரு முறை இருவரும் ஒரே வீட்டில் இருந்தபோது தானே கையும் களவுமாக பிடித்ததாக சந்திரசேகர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்திரசேகரின் மனைவி நமிதா தன் கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும், அவரது நண்பர்கள் அருண், ஹேமந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், தன் பங்கிற்கு கணவர் மீது போலீசாரிடம் புகார் கொடுத்து இருப்பதாக நமிதா தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகிய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.