தமிழ் சினிமாவில் நடிகர் கரண் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர். உலகநாயகன் கமல்ஹாசனால், அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்ட நடிகர் கரண், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தார்.
ஹீரோவாக வலம் வந்த நடிகர் கரண் திடீரென தன் ரூட்டை, வில்லன் பக்கம் திருப்பினார். அம்மன் சார்ந்த பக்தி படங்களில், நடிகர் கரணின் வில்லத்தனத்தை பார்த்து மிரண்ட 90’s கிட்ஸ்கள் ஏராளம் என சொல்லலாம்.
டாப் ரேஞ்சில் கொடிகட்டி பறந்த நடிகர் கரண், ஒரு கட்டத்தில் 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து, தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டதாகவும், அந்த ஆண்டியின் கைப்பாவையாக மாற்றப்பட்ட நடிகர் கரண், தன் சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரை வைத்து எடுத்தது தான் அவர் கெரியரை மொத்தமாக இழந்து அடையாளம் தெரியாமல் போனதற்கு காரணம் என்றும், இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது என்றும் சொல்லப்பட்டது ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
மேலும், பேசிய போது அவருடைய தோற்றம், கம்பீரமாகவோ, திமிராகவோ தான் பிறருக்கு தோன்றும். ஆனால், அவரோடு பழகியவர்களுக்கு தான் தெரியும். அவர் மிகவும் எளிமையானவர். எப்போதும், அன்பாக பேசுபவர் சிரித்த முகத்துடன் அனைவரிடம் பழகக் கூடியவர் என்றும், நேர்காணல் ஒன்றில் பேசுகையில் இடையில் நடிக்கும் போது, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 300 ரூபாய் கொடுத்து விரட்டி விடுவார்கள் என்றும், பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன் என்று கரண் வருத்ததுடன் தெரிவித்ததாகவும்,
கரண் ஒரு பெண் அதாவது, அந்த ஆன்ட்டியின் கட்டுப்பாட்டில் வாழ்க்கை இழந்தார் என்று கூறுவது முற்றிலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். தற்போது, கரண் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆன்ட்டி கட்டுப்பாட்டில் இருப்பது அதிலிருந்து மீண்டு வராமல் இருப்பதும் அவரால் தான் மார்க்கெட்டை இழந்துவிட்டார் ஓடி ஒளிந்து கொள்கிறார் என்பது போன்ற இப்படியான கிசுகிசு அப்போதைய காலங்களில் இருந்தே கரண் மீது வைக்கப்பட்டு தான் வந்தது என்றும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.