தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.அவருக்கு ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா பிறகு தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் நிறைய கடினமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ்பெற்றார்.
சூர்யா தன் நடிப்புத் திறமையால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், போன்றவற்றை வென்றுள்ளார்.இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவிற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் அவருடைய தம்பி கார்த்தி அதில்
திரை வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் எதையும் கற்று சாதிக்க முடியும் என்று எனக்குக் கற்றுத் தந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.சமூகத்தில் அன்பை பரப்பும் அன்பான ரசிகர்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவில் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.