நடிகர் கார்த்தி சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ள, அதில் படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றையும் வழங்கி உள்ளார்.
நடிகர் கார்த்தியின் கெரியரில் 2022 ஆண்டு மறக்க முடியாத அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கிடைத்ததால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி.
இந்த மூன்று படங்களில் பொன்னியின் செல்வன் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும், அது கார்த்தி சோலோ ஹீரோவாக நடித்த படமில்லை. அப்படி அவர் சோலா ஹீரோவாக நடித்த சர்தார் படம் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக இருந்தது.
பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் இந்த வருட தீபாவளி ரேஸில் சர்தார் படம் அமோக வெற்றியை பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார் கார்த்தி. அதில் படக்குழுவினரும் அவர் அளித்த கிஃப்ட் தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக உள்ளது.
சர்தார் படம் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரால் வரும் ஆபத்துகளை பற்றி பேசி இருந்தது. இதன் காரணமாகவே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை வழங்கி இருந்தனர்.
தற்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை பரிசாக வழங்கி உள்ளார் கார்த்தி. அதில் என்ன ஸ்பெஷல் என்றால் அந்த பாட்டில் வெள்ளியால் ஆனதாம். கார்த்தி அளித்த இந்த விலையுயர்ந்த பரிசின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. கார்த்தியின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.