லேடி சூப்பர் ஸ்டார்-னா அவங்க ரெண்டு பேர் தான்.. நயன்தாராவை சீண்டிய கஸ்தூரி..!

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல கட்சியில், இணைந்து இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி பேட்டி அளித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி கேட்க நடிகை கஸ்தூரி நடிகைகளை பொறுத்தவரையில் அந்த நடிகைக்காகவே அந்த படத்தை பார்க்கலாம் என்று யார் ஒருவர் நடித்த படம் அமைகிறதோ, அவர்களுக்காகவே படம் ஒடுகிறதோ, அப்படி இருந்தால் மட்டும்தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்க முடியும்.

அப்படி பார்க்கும்போது இந்த காலகட்டத்தில் அப்படி ஒரு நடிகை இல்லை என்றும், ஆரம்ப காலகட்டத்தில் கேபி சுந்தராம்பாள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி நடித்தார். பல படங்களில் அவரை சுற்றி சுற்றி தான் கதை அமையும். அவருக்கு பின் நடிகை விஜயசாந்தியை சொல்ல முடியும். இந்த இரண்டு பேரை தவிர இப்போது யாருமில்லை என்று வெளிப்படையாக கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும், நயன்தாராவை வைத்து மாயா என்ற ஒரு படம் மட்டும் தான் அவரை மையப்படுத்தி ஓடியது. மத்த படங்கள் எதுவும் அப்படி பார்க்கும் படியாக இல்லை அதனால் அவர் கிடையாது என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

11 minutes ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

12 minutes ago

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

43 minutes ago

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

1 hour ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

16 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

17 hours ago

This website uses cookies.