தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.
பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல கட்சியில், இணைந்து இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி பேட்டி அளித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி கேட்க நடிகை கஸ்தூரி நடிகைகளை பொறுத்தவரையில் அந்த நடிகைக்காகவே அந்த படத்தை பார்க்கலாம் என்று யார் ஒருவர் நடித்த படம் அமைகிறதோ, அவர்களுக்காகவே படம் ஒடுகிறதோ, அப்படி இருந்தால் மட்டும்தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்க முடியும்.
அப்படி பார்க்கும்போது இந்த காலகட்டத்தில் அப்படி ஒரு நடிகை இல்லை என்றும், ஆரம்ப காலகட்டத்தில் கேபி சுந்தராம்பாள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி நடித்தார். பல படங்களில் அவரை சுற்றி சுற்றி தான் கதை அமையும். அவருக்கு பின் நடிகை விஜயசாந்தியை சொல்ல முடியும். இந்த இரண்டு பேரை தவிர இப்போது யாருமில்லை என்று வெளிப்படையாக கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும், நயன்தாராவை வைத்து மாயா என்ற ஒரு படம் மட்டும் தான் அவரை மையப்படுத்தி ஓடியது. மத்த படங்கள் எதுவும் அப்படி பார்க்கும் படியாக இல்லை அதனால் அவர் கிடையாது என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.