சினிமா / TV

உடம்பே சிலிர்த்துவிட்டது… மறைந்த ரத்தன் டாடா பற்றி கவிஞர் வாலி சொன்னது – வீடியோ!

புகழ்பெற்ற வர்த்தகத் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவருமான ரத்தன் டாடா அக்டோபர் 9ம் தேதி காலமானார். அவருக்கு வயது 86. அவரது அமைதியான தலைமையின் மூலம், ரத்தன் டாடா $5-பில்லியன் குழுவை 100 நாடுகளில் செயல்பாடுகளுடன் $100-பில்லியனாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவின் கட்டமைப்பை வடிவமைத்தார்.

தனக்கு சொந்தமான ஒவ்வொரு வணிக முயற்சியிலும் அவர் இந்தியாவை முதன்மைப்படுத்தினார். ரத்தன் டாடா தனது வணிக புத்திசாலித்தனத்தால் பிரகாசித்தார். வணிகம் சார்ந்த திறமைசாலியாக இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் ரத்தன் டாடா பார்க்கப் பட்டார்.

ஏழை எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து மக்களின் மனதில் இடத்தைப் படித்தார். வணிக ரீதியாக அவரது திட்டங்களும்,தொழில்களும் முன்னிலையில் இருந்தாலும் கூட ரத்தன் டாடாவின் எண்ணங்கள் எப்போதும் எளிய மக்களையும் அவர்களின் வாழ்க்கை அமைப்புகளையும் சுற்றி இருந்தது.

இதனிடையே ரத்தன் டாடாவின் மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று வரை பலரால் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பலரும் ரத்தன் டாடாவின் நற்குணங்களை பற்றி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வாலி இரத்தன் டாட்டா உடனான ஒரு சந்திப்பை கூற்றி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் ஒரு நாள் பயங்கர இடி, மழை, மின்னல் அந்த மழையிலும் நான் பீச் ஓரமா நடந்து வந்து கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு கார் என்னுடைய அருகே வந்து நின்றது. உடனே காரின் கண்ணாடி இறக்கி யங் பாய் நீ எங்கே போற வா கொண்டு போய் இறக்கி விடுகிறேன் எனக்கூறி நான் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் இறக்கி விட்டார்.

இதையும் படியுங்கள்: கழண்டு விழுறது கூட தெரியாம காட்டுறியேமா? வேதிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

உடனே நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உங்களது பெயர் என்ன என கேட்டவுடன். மக்கள் எல்லோரும் என்னை தாத்தா என அழைப்பார்கள் என கூறினார். அந்த அளவுக்கு மிகச்சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர் தான் ரத்தன் டாட்டா என கவிஞர் வாலி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த வீடியோ கேட்டதும் பலருக்கும் சிலிர்த்து போய்விட்டதாக இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

5 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

33 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

53 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

2 hours ago

This website uses cookies.