நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
திருமணத்திற்கு பிறகு இவரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தல பொங்கல் தினத்திலும் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்ட இந்த புதுமண ஜோடி ஷூட்டிங் ஸ்பாட்டிலே பொங்கல் வைத்து தல பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், வதந்திகள் குறித்து உங்கள் ரியாக்ஷன் என்ன என்று கீர்த்தி பாண்டியனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எல்லாமே பார்த்து சிரிப்பு தான் வந்தது. குறிப்பாக, பிரகதி எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. அதன்பின், எல்லோரும் நண்பர்களாக கேங்காக இருக்கும்போது அசோக்செல்வன் அறிமுகமாகினார்.
அப்போது, பிரகதி அமெரிக்காவில் அசோக் செல்வனை சந்தித்து ஒரு ட்ரிப் சென்றபோது கல்யாணமாகிவிட்டது என்று செய்திகள் வெளியானதை பார்த்து ரொம்பவே சிரிப்பா இருந்தது. ஏனென்றால், எல்லோரும் நண்பர்கள் என்று கூறி அசோக் செல்வன் பிரகதி காதலுக்கு நடிகை கீர்த்தி பாண்டியன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அசோக் செல்வன் சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் இருந்து திருமணம் செய்ய உள்ளார்கள் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.