தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.
சூர்யா, விஜய், ரஜினி,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் சமீபத்திய நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படம் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என சொல்லலாம்.பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட இந்த படத்தில் நடிப்பில் அசத்தி இருப்பார்.இப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.
இதையும் படியுங்க: காதை இனிமையாக்கும் ராஜாவின் குரல்… விடுதலை 2 படத்தின் பாடல் வெளியீடு…!
கீர்த்தி சுரேஷ் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, கீர்த்திக்கு தூரத்து உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு, ஒரு அரசியல் பிரபலத்தின் மகனுடன் திருமணம் என பேசப்பட்டது.
இந்த தகவல்களை அவரது தந்தை சுரேஷ் முற்றிலுமாக ஊடகத்தினரிடம் மறுத்தார். இப்போது, மீண்டும் அதே போன்ற ஒரு தகவல் பரவி வருகிறது.
32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷும், இந்திய அளவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கும் ராக் ஸ்டார் அனிருத்தும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக வேலை பார்த்து இருக்கின்றனர்.
அது மட்டுமன்றி இருவருக்கும் ஒரு நல்ல நட்பும் இருந்து வருகிறது.தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, கீர்த்திக்கும் அனிருத்திற்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. திரைத்துறையில் பிசியாக வலம் வரும் அனிருத் பிரபல தாெழில் அதிபர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கீர்த்திக்கும் இவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்பாக கூட இருக்கலாம் என்ற தகவலும் சொல்லப்படுகிறது . அனிருத் ரஜினிகாந்தின் கூலி,அஜித்தின் விடாமுயற்சி விஜய்யின் தளபதி 69 உள்பட பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.