ஒருவேல அப்படியிருக்குமோ?.. பிரபல இயக்குனருடன் நெருக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்..!

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.

முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். தசரா படத்தின் பிரமோஷனுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பை சென்றிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தசரா படத்தில் நானி மது குடிக்கும் ஸ்டைலை பார்த்து அப்படியே செய்திருக்கிறார். குடித்துவிட்டு பாட்டிலை போட்டுள்ள கீர்த்தி சுரேஷின் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் கலவையான கமெண்டுகளை பெற்றது.

இந்நிலையில், நடிகர் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படம் திரைக்கு வந்தது. வசூல் ரீதியாவாகவும், மக்கள் மனதிலும் ஏகபோக வரவேற்பை தற்போது பெற்று வருகிறது.

இதுபோக தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ”மாமன்னன்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படி கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இதற்கிடையில் நடிகர் விஜய்யுடன் ரகசிய காதலில் இருந்து வருவதாகவும் இதனால், சங்கீதாவை பிரிந்து கீர்த்தி சுரேஷை இரண்டாம் கல்யாணம் செய்யவுள்ளார் என்ற செய்திகளும் வெளியானது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கு இயக்குனரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் இயக்குனருமான வெங்கி அட்லுரியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல அப்படியிருக்குமோ என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Poorni

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

12 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

14 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

14 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

15 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

16 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

17 hours ago

This website uses cookies.