விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
குறிப்பாக CWC நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலி பென்ஸி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அண்மையில், கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது. அண்மையில் புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் தன் அப்பா, அம்மா, அண்ணனுடன் தனியார் youtube சேனலுக்கு புகழ் பேட்டி கொடுத்திருந்தார். அதில் சிறிய வயது முதல் புகழ் பல கஷ்டங்களை சந்தித்து வந்திருக்கிறான். அப்படி கஷ்டத்தில் இருந்து இந்த இடத்திற்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சேலை கட்டி நடிக்கும் போதெல்லாம் என் உறவினர்கள் கிண்டல் செய்து விமர்சிப்பார்கள். ஆனால், அந்த சேலையை கட்டி நடித்து அவர்கள் என் வீடு தேடி வரும் அளவிற்கு இப்போது புகழ் வளர்ந்திருக்கிறான். புகழ் வருகிறான் என்றாலே என் வீட்டுக்கு கூட்டம் தேடி வந்து விடுவார்கள்.
கோயில் திருவிழாவிற்கு 10 நிமிடம் வந்து எம்ஜிஆர் ராதாரவி போல பேசியதும் போலீஸ்காரர்களே அவனுடன் புகைப்படம் எடுத்தார்கள். என் மகன் தப்பான விஷயம் செய்து எந்த பெயரும் வாங்கியதில்லை. ஏனென்றால், சின்ன வயதிலிருந்து கஷ்டம் தான். அவன் அப்பா ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால், இரண்டு பிள்ளைகளுமே சம்பாதிக்க படிப்பை முடித்து சம்பாதித்தார்கள்.
கடலூரில் கட்டிய வீட்டை இடித்தார்கள். அதன் பின்னர், எங்க ஊரில் வீட்டைக் கட்டி எங்களுக்கு கொடுத்தான். சின்ன வயதில் இருந்தே கஷ்டம் தான் அனுபவித்திருக்கிறான். இப்போது, தினமும் விமானத்தில் பறக்கிறான். அவனால் நாங்களும் சந்தோஷமாக இருக்கிறோம். என்னை இப்போது கடலூரில் கௌரவமாக வாழ வைத்திருக்கிறான்.
சிறு வயதில் என்னிடம் அம்மா நீ செத்து போயிட்டா நானும் உன் கூட செத்துப் போய்டுவான் என கேட்பேன். அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறான் என்று புகழ் அம்மா கூறியிருக்கிறார். மேலும், யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவி செய்திருக்கிறான். பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறான். யாருக்கும் தெரியணும்ங்கற அவசியம் இல்லை. தெரிந்தால் என்ன நடக்கப் போகிறது எங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று புகழின் அம்மா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.