விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 28ம் தேதி ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை அண்ணாசலை தேவி திரையரங்கிற்கு வந்திருந்தார். அவர்களுடன் திரையரங்கிற்கு விசிட் அடித்த விஜய்சேதுபதியும் ரசிகர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் படத்தை பார்த்து மகிழ்ந்தார். திரையரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நயன்தாரா திரையரங்கிற்கு வந்ததை அறிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு வாசலில் குவிந்தனர், நயன்தாராவின் காருக்கு மலர் தூவி வரவேற்பளித்த ரசிகர்கள் நயன்தாராவை அருகில் சென்று பார்க்கவும் அவருடன் செல்பி எடுக்கவும் முண்டியடித்ததால் திரையரங்கு வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்ட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.