அந்த விஷயத்தால் சுந்தர்.C 2 வருஷம் சும்மா இருந்தாரு.. குஷ்பு வேதனை..!

Author: Vignesh
22 May 2024, 1:21 pm
Kushboo - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

kushboo - updatenews360

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 பட உருவாகி வரும் மே மூன்றாம் தேதி தேர்தலில் வெளியாகியுள்ளது.

kushboo

மேலும் படிக்க: ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!(Video)

இப்படம் குறித்து சுந்தர் சி இயக்கிய அனைத்து படங்களும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான். அந்த வகையில், அன்பே சிவம் படம் குறித்து சமீபத்திய பேட்டியில் குஷ்பூ பேசியுள்ளார். அன்பே சிவம் படத்தை எல்லாம் ரீ ரிலீஸ் செய்ய முடியாது. அந்த படம் எடுத்த பின் என்னுடைய கணவர் சுந்தர்சி இரண்டு ஆண்டுகளாக வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தார். ஆனால், இப்போது அந்த படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

anbe sivam

மேலும் படிக்க: எனக்கு நம்பிக்கை இல்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு VJ விஷால் திடீர் பதிவு..!

இந்த படம் ரிலீசான சமயத்தில் திரையரங்குகளில் போய் பார்த்து வெற்றி பெற வைத்திருந்தால், என் கணவர் சும்மா வீட்டில் உட்கார்ந்து இருக்க மாட்டார். ஆனால், எது நடந்தாலும் நன்மை என சொல்லுவோம். அந்த மாதிரி அன்பே சிவம் ஓடவில்லை என்றாலும், நன்மை என எடுத்துக்கொண்டோம். ஏனெனில், அந்த படத்திற்கு பின் தான் நாங்கள் எங்களுடைய அக்னி கிரியேஷன் சொந்த தயாரிப்பு நிறுவனமாக துவங்கினேம். அன்பே சிவம் மட்டும் ஓடியிருந்தால் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கவே மாட்டோம். சுந்தர் சி இயக்கிய சிறந்த படங்களில் அன்பே சிவம் மிக முக்கியமான படம் அந்த படத்துக்காக அவர் ஒவ்வொரு Frame-க்கும் உழைத்தார் என குஷ்பூ கூறினாராம்.

Views: - 82

0

0