தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்பு தனது தந்தை குறித்து பேசியுள்ளார். அதில், அவர் உன்னால் தனியாக என்ன சாதித்து விட முடியும் என்று தனது தந்தை தன்னிடம் கேட்டதாகவும், இன்றும் பெண்ணை வக்ர புத்தியோடு பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய, மிகப்பெரிய ஆயுதமே பெண்களை இழிவாக பேசுவது தான். அதன் வழியாக தான் ஒரு ஆண் தன்னை ஆண் என்று நிரூபிக்க முடியும் என்று கருதுகிறார்கள். அது எவ்வளவு கேவலமான புத்தி என்று அவர்களுக்கு புரிய மறுக்கிறது. ஒரு தந்தையானவர் நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
16 வயதிலிருந்தே என்னுடைய தந்தையிடம் நான் நெருக்கமாக இருந்தது இல்லை. அதற்குப் பிறகு, நான் என்னுடைய தந்தையை பார்த்ததே இல்லை. இப்போது, கூட அவர் உயிரோடு இருக்கிறாரா ? இல்லையா ? என்பது கூட எனக்கு தெரியவில்லை. அது குறித்து எனக்கு பெரிதாக எந்தவித அக்கறையும் இல்லை. என் தந்தை என்னிடம் தவறாக நடந்து கொண்டது. என்னுடைய இதயத்தில் எங்கேயோ இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று குஷ்பூ வெளிப்படையாக பேசியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.