சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகிறது.
கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் சீண்டல்களை கொடுப்பதாகவும் அக்கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.
ஆனால், கல்லூரி இயக்குனர் ரேவதி இராமச்சந்திரன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இன்னும் பிரச்னைக்கு தீர்வு வரவில்லை.
இந்த பிரச்சனை அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் நடிகையுமான அபிராமி வெங்கடாச்சலம்,சம்மந்தப்பட்ட பேராசியர்களுக்கு ஆதரவாக பேசி மாணவர்களை பொய் சொல்லுவதக குறை கூறினார்.
இதனால் அபிராமி மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதுகுறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், கலாஷேத்ரா ஹரி பத்மன் சார் பற்றி இப்படி புகார் வந்த போதே, ஒரு மாணவி சார் கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும், நீங்கள் கொஞ்சம் உறுதியாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் மெசேஜ் அனுப்பிவிட்டு பின்னர் போராட்டத்தில் அதே பொண்ணு முன்னாடி நின்னு We Want Justice என கத்தி கூச்சலிட்டுள்ளார்.
ஆக, இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த ஆடியோ ஆதாரம் ஒன்றையும் அபிராமி அந்த பேட்டியில் காட்டியுள்ளார்.
இதுகுறித்து நடிகை குட்டி பத்மினி பேட்டியொன்றில் கூறுகையில், நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது சாதாரணமாக இருக்கலாம் என்றும், பல டேக்குகள் வாங்கும் உங்களுக்கு அது பெரிய உணர்வாக இருக்காது எனவும், ஆனால் மற்ற பெண்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல ஆசிரியராக வெளியே போகப்போகிறார்கள் எனவும், அப்படியிருக்கும் அவங்களின் மனவேதனையை எப்படி நீங்கள் சாதாரணமா சொல்லிட்டீங்க என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த அபிராமி, ஒன் மோர் விசயம், உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி என்றும், நாங்க பாத்துக்கறோ ஆண்ட்டி, இந்த வயசுல உங்கள் உடம்பை பார்த்துக்கோங்க என்று பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அபிராமி.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.