இது என்னடா நயனுக்கு வந்த சோதனை..! மார்க்கெட் இல்லாததால் லோ பட்ஜெட் ஹீரோவுடன் கூட்டணி?..

விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்யாகியுள்ளார்.

இரட்டை குழந்தைகள் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, திடீரென ஏகே 62ல் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டார். இதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலக போவதாக ஷாக்கிங் தகவல் வெளியானது பின்னர் அது வதந்தி என்று தெரியவந்தது.

இதனிடையே, நயன்தாரா பிரபல தயாரிப்பாளரின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதாக கமிட்டாகி இருந்தநிலையில், ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டு அதற்கான முன் தொகையும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

ஆனால், அந்த இரண்டு படத்திற்கும் நயன்தாராவால் தற்போது கால்ஷீட் கொடுக்கமுடியாமல் தள்ளிப்போன நிலையில், நயன்தாராவை இப்படத்திலிருந்து விலக்கிவிட்டு, தான் கொடுத்த முன் தொகையையும் அந்த தயாரிப்பாளர் திரும்ப பெற்றுக்கொண்டு உள்ளாராம்.

இந்த 2 படங்கள் கைநழுவிப்போனதினால் ரூ. 20 கோடி சம்பளத்தை நயன்தாரா இழந்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த நேரத்தில் தான் நயன்தாராவின் புது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் நயன்தாரா யாரும் எதிர்பார்க்காத ஒரு ஹீரோவுடன் ஜோடியாக சேர இருக்கிறார்.

நடன இயக்குனரிலிருந்து நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ் தான் அந்த ஹீரோவாம். பொதுவாக ராகவா லாரன்ஸ் படங்களில் புதுமுக நடிகைகள், ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய நடிகைகள் தான் நடிப்பார்கள் ஆனால் தற்போது நயன்தாரா நடிக்க இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, மார்க்கெட்டில் இழந்ததால் நயன்தாரா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரியவருகிறது. ஆனால், வழக்கம் போல ராகவா லாரன்ஸுக்கு இந்த படமும் திகில் திரைப்படம் ஆக தான் அமைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மேயாத மான் என்னும் திரைப்படத்தை இயக்கிய ரத்னம் தான் இந்த படத்தின் இயக்குனர் ஆவார் என்றும், மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தான் அனைவருக்கும் தெரிய வரும்.

Poorni

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

14 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

14 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

16 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

16 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

16 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

16 hours ago

This website uses cookies.