சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சமீபத்தியில் ராஷ்மிகா மந்தனா – ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தை பற்றி மோசமாக விமர்சித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், வக்கிரத்தின் உச்சகட்டம் தான் இந்த திரைப்படம். இப்படி ஒரு ஆணாதிக்கம் நிறைந்த படங்களை எடுப்பதால் சமூகத்தில் மேலும் சீர்கேடுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இது போன்ற படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க கூடாது. இதுபோன்ற தவறான கருத்துகள் தான் மக்களைப் போய்ச் சேரும். பெண்களை சிறுமைப்படுத்தும் இதுபோன்ற கதைகளில் நடிக்க ராஷ்மிகா யோசிக்கவேண்டும்.
இந்த படத்தை எடுத்தவர் மனதில் எவ்வளவு ஆணாதிக்க வக்கிரம் இருந்திருக்கும். அதன் வெளிப்பாடு தான் படத்தில் தெரிந்தது. படத்தை பார்த்துவிட்டு தூங்கினால் பயம் தான் கனவில் வருகிறது. அனிமல் படத்தைப் பார்த்து என்னால தாங்க முடியாமத்தான் கிண்டலா என்னோட ட்விட்டர்ல பதிவு பண்ணேன். ஆனால், ரசிகர்கள் வேறமாதிரி எடுத்துக்கிட்டாங்க. இப்படியொரு மோசமான படத்துக்கு வெளிப்படையால்லாம் திட்ட முடியாது என விமர்சித்து தள்ளியுள்ளார் லட்சுமி ராமகிரிஷ்ணன்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.