சரவணா ஸ்டோர் உரிமையாளரான அண்ணாச்சி தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுட்டேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி என பல நடிகைகள் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி அண்ணாச்சி செலவு செய்துள்ளார்.
இப்படத்திற்காக அண்ணாச்சி பல கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது தான் அதிகம் என்று சொல்லலாம்.
இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கடையை வெச்சிகிட்டு அதுலயே நல்லா சம்பாதிக்கலாம் என்றும், ஆனா அதுலாம் ஒரு வேலை இல்ல, தான் இனி நடிக்கப்போகிறேன் என நடிக்க வந்துவிட்டதாக தி லெஜண்ட் சரவணன் அருள் மீது கடுமையான விமர்சனங்களை செட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.
இவர் தி லெஜண்ட் என்ற படத்துல நடிச்சாரு, ஆனா பாருங்க படம் வந்த வேகம் தெரியாம போயிடுச்சு என்றும், ஆனா அப்பவும் விடாம இப்போ அடுத்த படம் வேற நடிக்க போறாராம் என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ… நான் எதப்பத்தியும் கவலையே பட மாட்டேன் நான் எனக்கு புடிச்சத பண்ணுவேன் என்று வேறு ஒரு புது லுக்கில், கொஞ்சம் லைட்டா தாடியெல்லாம் வெச்சு அண்ணாச்சி போட்டோ வெளியிட்டு உள்ளார். இதனை பாத்த ரசிகர்கள் அட எப்பா கிறுகிறுனு வருதே.. நீங்க நிறுத்தவே மாட்டீங்களா என்று புலம்பி வருகிறார்கள்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.