நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ட்ராகன் திரைப்படத்தின்”ஏன்டி என்ன விட்டு போன” பாடலை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது.ஏற்கனவே இப்பாடலை நடிகர் சிம்பு பாடல் இருப்பதாக படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.இதனால் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு குரலை கேட்க ஆவலுடன் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை படத்தின் இசையமைப்பாளரான லியோனின் தந்தை மரணம் அடைந்தார்.இதனால் பாடல் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கலாமா என படக்குழு கேட்டபோது,அதற்கு லியோன் வேண்டாம் பாடலை திட்டமிட்டபடி வெளியிடலாம் என தெரிவித்தார்.தந்தையின் இறுதி சடங்கு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் போதே தன்னுடைய அறையில் உட்கார்ந்து பாடல் பதிவிற்கான இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டார்.
இதையும் படியுங்க: SK-25 பராசக்திக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…விஜய் ஆண்டனி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கதி கலங்கும் சிவகார்த்திகேயன்.!
இது அவர் சினிமா மீதான எவ்வளவு ஆழமான அன்பை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.சொன்னபடி நேற்று மாலை படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் “ஏன்டி என்ன விட்டு போன” பாடலை லியோனின் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளரின் இந்த நெகிழ்ச்சியான செயலால் ரசிகர்கள் அவரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.