உலகநாயகன் கமலஹாசன் இந்திய சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பங்களிப்பின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். தற்போது கமல் சினிமாவில் அடுத்து வரும் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளார். அதிலும் கமலை போலவே பாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரும் கமல் பாணியை பின்பற்றி வருகிறார்.
இதனிடையே, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளையும், அவார்டுகளையும் வாங்கி உள்ளார். பின்னர் கமலஹாசன் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு தான் போதுமான அளவு விருதுகளை வாங்கி விட்டேன் என்றும், இனி மேல் தனக்கு விருதுகள் வழங்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று விருது வழங்கும் கமிட்டிக்கே கடிதம் ஒன்றையும் அனுப்பி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். இதனை அடுத்து பாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும், கமலஹாசன் போலவே எக்கச்சக்க விருதுகளை வாங்கி குவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 1969 ஆம் ஆண்டு வெளியான “சாட்ஹிந்துஸ்தானி” என்னும் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அமிதாப்பச்சன். தனது அபார வளர்ச்சியின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார். அதிலும் பெஸ்ட் ஆக்டர்காக 15 முறையும், பெஸ்ட் சப்போட்டிங் ஆக்டர்காக 15 முறையும், இந்திய கௌரவ விருதினை 9 முறையும் பெற்று இருக்கிறார்.
இத போன்று இந்திய அரசாங்கம் அமிதாப்பச்சனை கௌரவித்து பல விருதுகளையும் வழங்கியுள்ளது. அதிலும் 2018 ஆம் ஆண்டு திரைத்துறையில் மிக உயரிய பங்களிப்பை வழங்கியதற்காக, வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதும் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. இப்படியாக அமிதாப்பச்சன் வாங்கிய விருதுகளை மட்டும் அடுக்கிக் கொண்டே சொல்லலாம்.
அந்த அளவிற்கு பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் ஜாம்பவான் ஆகவே திகழ்ந்து வந்தார். தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனை போலவே அமிதாப்பச்சனும் அதிரடியான ஒரு முடிவினை எடுத்து இருக்கிறார். அதாவது, இளம் நடிகர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்குங்கள் என்றும், இனிமேல் தனக்கு விருதுகளும், அவார்டுகளும் வழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாராம்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.