தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் தனுஷை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்று விவாகரத்து செய்துவிட்டார்.
அதேபோல் இளைய மகள் சௌந்தர்யாவும் அஷ்வின் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு வேத் என்ற மகன் பெற்றெடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து மீண்டும் ஒரு மகன் பெற்றுள்ளார். அண்மையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கிட்டத்தட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து அதிர்ச்சி அளித்தார்.
இதனிடையே போலிஸாரின் கிடுக்குபிடி விசாரணையில் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த வேலைக்காரியும், அவரது கார் ட்ரைவரும் பிடிபட்டனர். அந்த வகையில் வேலைக்காரியிடம் 100 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரில் 60 பவுன் மட்டுமே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் போலீசார் விசாரணையில், கேள்விக்கேட்ட நிலையில் மழுப்பலான பதிலை தொரிவித்ததாக தகவல் வெளியாகியது.
பின்னர் திருடிய அந்த பெண் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்று தைரியமாக பதில் அளித்ததாகவும், தற்போது கணக்கில் வராமல் இதுபோன்று எவ்வளவு சொத்துக்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சேர்த்து வைத்துள்ளார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், இன்னும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மற்ற சொத்துக்கள் மற்றும் வீடுகளில் எவ்வளவு கணக்கில் வராத சொத்துக்கள் உள்ளது என்பதை குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய காரின் சாவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரஜினி குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் இந்த திருட்டு சம்பவத்தின் பின்னணியில் ஏதோ பெரிய விஷயம் மறைந்திருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். மேலும், ரஜினியின் தீவிர ரசிகர்கள், பாவம் தலைவருக்கு சோதனை மேல் சோதனையா? அவருக்கு யாரேனும் சூனியம் வச்சிட்டு இருப்பாங்க அதான் இப்படியெல்லாம் நடக்குது என மூடத்தனமாக கூறி வருகிறார்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.