பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அடுத்து கலையரசன் திவ்யா துரைசாமி நடிப்பில் வாழை திரைப்படத்தை இயக்குகிறார்.வாழை’ திரைப்படம் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லும் போது வாழை என் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு உண்மைக்கதை நான் உருவாக்கும் எல்லா கதாபாத்திரங்களும் என் வாழ்க்கையில் நான் பார்த்தது. அவர்கள் இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே எனக்குள் பதட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
வாழை படத்தில் இடம்பெற்றுள்ள ‘பாதகத்தி’ பாடல் தன்னை தொந்தரவு செய்துகொண்டேயிருப்பதாகவும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது எனவும் குறிப்பிட்டார். நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறி நடிகர்களிடம் வேலை வாங்கினேன். நடிகர் கலையரசன் தன் தலையில் 100 கிலோ எடையை சுமந்ததாகவும் திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கினார் எனவும் நடிகர்கள் கதாப்பத்திரமாகவே மாறி கடுமையான உழைத்தனர் அவர்களை பார்க்கவே பாவமாக இருந்தது, நிறைய வேலை வாங்கியிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
மொத்த படக்குழுவுக்கும் நன்றி. என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை நான் படமாக்கி இருக்கிறேன் அதை என் மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கூட கிடையாது. பிரமிப்பாக இருக்கிறது. என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் ‘வாழை’.
என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் இது” என்றும் மாரி செல்வராஜ் சொல்லியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.