‘ரங்கநாயகியா நடிக்க வேண்டியது நான்’.. ரஜினிகாந்த் என்ன தான் ஜோடியா நடிக்க சொன்னார் : ரகசியம் உடைத்த மதுவந்தி..!

ரஜினி படத்தில் மீனாவிற்கு முன் ரஜினி தன்னை தான் நடிக்க அழைத்தார் என்று ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி கூறி இருக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியா மீம் கிரியேட்டர்கள் மதுவந்தி இந்த பெயரை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். ஒய்.ஜி. மகேந்திரன் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் தான் மதுவந்தி. இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தர்மதுரை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி முக்கிய ரோலில் நடித்திருந்தார். இது தான் நடிகை மதுவந்தி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார் மதுவந்தி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து நடிகை மதுவந்தி ஆர்யாவின் ‘கடம்பன்’ மற்றும் ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார். அதன் பிறகு வெள்ளித் திரையுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை மதுவந்தி, சின்னத் திரையிலும் நுழையலாம் என்று முடிவெடுத்து சன் டிவியில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘வாணி ராணி’ தொடரிலும் நடித்தார். பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்த இந்த சீரியலில் ‘சந்திரிகா’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மதுவந்தி.

மதுவந்தி அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்ரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியின் மகன் தான் இந்த அருண் என்பது குறிப்பிடத்தக்கது. அருண், மதுவந்தி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது அருண், மதுவந்தி இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

2020ஆம் ஆண்டு லாக் டவுனின் போது தான் மதுவந்தியை பலரும் அறிந்தது. அந்த சமயத்தில் மதுவந்தி இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடியை அவர்களது வங்கி கணக்கில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மோடி செலுத்தி இருப்பதாக கூறி இருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இவர் மீம் மெட்டீரியல் ஆனதை தொடர்ந்து அடிக்கடி பல முறை இவர் மீம் மெட்டீரியலாக சமூக வலைதளத்தில் இருந்து வந்தார்.

இப்படி ஒரு நிலையில் முத்து படத்தில் தன்னை தான் ரஜினிகாந்த் நடிக்க சொன்னார் என்று மதுவந்தி கூறி இருப்பது சமூக வலைதளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது.

அதில் பேசிய அவர் ‘நான் கல்லூரி படிக்கும் போது முத்து படத்தில் ரங்கநாயகி நடிக்க ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்தது அதேபோல கமல் படத்தில் நடிக்க கூட அழைப்புகள் வந்தது ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய பாட்டி அனுமதிக்கவில்லை.

படிப்பை முடித்துவிட்டு தான் எதுவாக இருந்தாலும் என்று மிகவும் கண்டிப்பாக சொல்லிவிட்டார்’ என்று கூறியிருக்கிறார்.

Poorni

Recent Posts

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

54 minutes ago

கொளுத்துவோமா.. மாஸ் BGM : வெளியானது GOOD BAD UGLY GLIMPSE வீடியோ!

அஜித் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும்…

1 hour ago

கமல் கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகர்.. படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்!

நெட்பிளக்ஸில் விரைவில் வெளியாகும் படம் டெஸ்ட். மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதையும்…

1 hour ago

விஜய்க்காக ரஜினி படத்தில் பழி வாங்கப்படும் பிரபல நடிகை? இதான் அந்த அப்டேட்டா!!

ரஜினிகாந்தின் கூலி படத்தில் இணைந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை:…

1 hour ago

கல்யாணம் ஆகும் என காத்திருந்த நாயகி… 49 வயதிலும் முரட்டு சிங்கிள்!!

திருமணம் செய்து கொள்ளாமல் பல பிரபலங்கள் இன்று வரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் உள்ள நடிகை காதலும்…

2 hours ago

இனிமேல் அது நடக்காது…காதல் குறித்து மனம் திறந்த சமந்தா.!

கம் பேக் கொடுக்கும் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா,இவர் நாக சைதன்யாவை…

2 hours ago

This website uses cookies.