இராணுவத்துல வேலை.. – மனைவி குறித்து ஆச்சர்ய தகவலை வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்..!

தமிழ் சினிமாவில் சிங்கம் புலி பல திரைப்படங்களில் உதவி இயக்குனர், கதை ஆசிரியர், இயக்குனராக இருந்தாலும் இவருவர் காமெடி நடிகராகவே நடித்து வந்த நிலையில், முதல் முறையாக மகாராஜா திரைப்படத்தின் மூலமாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். இது ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார். நடிகர் சிங்கம்புலி பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அதற்குப் பிறகு ரெட், மாயாவி படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். ஆனாலும், அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு கிடைக்க தொடங்கியது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் குழந்தை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கம் புலியை யாராலும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. அதிலும், தன்னுடைய அப்பாவான ஜீஎம் குமாரிடம் அப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே என்று கேட்பது, பிறகு எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நீங்கள் எல்லாம் மாடு முட்டி தான் சாகப் போகிறீர்கள் என்று சாபம் கொடுப்பது ரசிகர்களிடையே இவரை ரசிக்க வைத்தது.

அதற்குப் பிறகு நடித்த படங்களில் எல்லாம் சிங்கம் புலி காமெடி கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால், விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் பாலியல் வன்புணர்வு செய்பவராக நடித்திருக்கிறார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்து வருகிறது. படத்தைப் பார்த்து பல ரசிகர்கள் ஏன் சிங்கம்புலி இப்படி செய்து விட்டீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். அவர் அளித்த பேட்டியில் அதில், என்னுடைய மனைவி அந்த மகாராஜா படத்தை பார்க்கவில்லை. என்னுடைய குழந்தைகள் அந்த படத்தை பார்த்து விட்டார்கள். ஆனால், அவர்கள் சரி தவறு எது என்று சொல்லவில்லை. ஆனால், மனைவி படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாரோ என்று தெரியவில்லை என்று சொல்லி இருந்தார்.

அதோடு என்னுடைய மனைவி என் மாமா பொண்ணு தான், அவர்களுடைய பூர்வீகம் அந்தமான் இப்போ ஆர்மியில் கர்னலா இருக்காங்க, அவங்க பெரும்பாலும் ஹிந்தி படங்கள் தான் பார்ப்பாங்க, இதுவரை என்னோட ஐந்து படங்கள்தான் பார்த்திருப்பாங்க, இப்ப மகாராஜா படத்தை பார்த்துட்டு என்ன சொல்லுவாங்கன்னு தெரியல, அவர்களை எப்படி பேஸ் பண்றதுன்னு தெரியல என்று சிங்கம்புலி அந்த பேட்டியில் பேசியிருந்தார். இந்நிலையில், இந்த பேட்டியை பார்த்த பலரும் காமெடி நடிகராக எல்லோரும் சிரிக்க வைத்த சிங்கம் புலியின் மனைவி ராணுவத்தில் கர்னலாக இருக்கிறார் இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் மனைவியை பற்றி சிங்கம் புலி பெரிதாக இதுவரைக்கும் எந்த பேட்டியிடம் பேசவில்லை என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.