தமிழ் சினிமாவில் உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர் தான் மாளவிகா. ஸ்வேதா மேனன் என்ற பெயரை இவர் மாளவிகா என்று மாற்றிக் கொண்டார். இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த இவர் மேஷ் மேனன் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருக்கு விலகி இருந்தார். இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்தார்.
இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தது புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனரின் பெயரை குறிப்பிடாமல் அந்த இயக்குனர் கதை சொல்லும் போது வேறு மாதிரியும் படப்பிடிப்பு தளத்தில் அதற்கு மாற்றாக வேறு மாதிரி நடந்து கொண்டார்.
ஆனாலும், அதற்கு ஒப்புக் கொண்டு நடித்தேன். காட்சிகள் கூட முன்பே சொல்லாமல் அதை செய்ய சொல்லி பண்ணினேன். கதைக்கு முக்கியம் என்று இயக்குனர் கூறி சமாதானம் செய்து பண்ண வைத்தார். அதன் பின் தான் அந்த சீன் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. அந்த இயக்குனர் யார் என்று கூற முடியாது. அதுதான் என்னுடைய கசப்பான அனுபவமாக இருந்தது. மேலும், நடிகர் விஜய்யுடன் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்தேன்.
அறிமுக பாடலுக்கு நடனமாட ஓகே சொன்ன சில மாதத்தில் நான் கர்ப்பமாகி விட்டேன். மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால், அப்பாடலில் நடனமாடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதனால், விஜய் படம் என்ற ஒரு காரணத்தால் விலகிக் கொள்ளாமல் அங்கும் இங்குமாக நடப்பது போல் தான் நடித்ததாகவும் மாளவிகா கூறியிருக்கிறார். இது தனக்கு ஏமாற்றமாக இருந்தாகவும் விஜய் தென்னிந்திய ரித்திக் ரோஷன் என்று மாளவிகா மீது கூறியுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.