![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/07/image-800x420.jpg-29.png)
மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ நடிகர் மம்முட்டி இவர் ஒரு புகைப்பட ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞர் இவர் எங்கு சென்றாலும் தன்னுடைய புகைப்பட கருவியையும் உடன் எடுத்துச் செல்வார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/07/1000011699.jpg)
புகைப்படம் எடுப்பதில் இவருக்கு அலாதி பிரியம் உண்டு தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் அவர் ஷேர் செய்வது உண்டு. அப்படி அவர் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது நெட்டிசன்களால் புகழப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த பறவையியல் நிபுணர் கே கே நீலகண்டன் நூற்றாண்டு விழாவில் மம்முட்டி எடுத்த புகைப்படம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த கண்காட்சியில் பல பறவைகளின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதில் நடிகர் மம்முட்டி எடுத்த ஒரு இலையின் நுனியில் புல்புல் பறவை அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/07/1000011700.jpg)
அந்த புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த புகைப்படத்தை மம்முட்டியின் ரசிகரான கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் மூன்று லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.இந்த புகைப்படம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என தெரிவித்த அவர் இந்த புகைப்படத்தை தான் கட்ட உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு அறையில் வைக்கப் போவதாக பூரிப்புடன் தெரிவித்தார்.ஏலத்தொகை மூன்று லட்சம் பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/07/1000011701.jpg)
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0