சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அத்துறையில் உள்ளவர்களை திருமணம் செய்வது வாடிக்கைதான் என்றாலும் வாழ்க்கையில் நிலைத்து நின்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனென்றால் கருத்து வேறுபாடு காரணமாக பல நட்சத்திர ஜோடிகள் பிரிவதுதான்.
தற்போது அந்த வகையில் நடிகை ஒருவர் இயக்குநரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
2012ஆம் ஆண்டு வெளியான சாட்டை படம் மூலம் டப்பிங் கலைஞராக அறிமுகமானவர் நடிகை ரவீனா ரவி.
இவரது தாய் ஸ்ரீஜா ரவி பிரபல டப்பிங் கலைஞர். சிம்ரன், ரம்பா , தேவயானி, லைலா, ஷாலினி, மாளவிகா உள்ளிட்ட பலருக்கு டப்பிங் பேசியுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஏராளமான மலையாள படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.
இவரது மகளான ரவீனா ரவி, டப்பிங் கலைஞராக அறிமுகமான பின் எமி ஜாக்சன், அமலா பால், சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, கேத்தரின் தெரசா, மடோனா, ராஷி கண்ணா, திரிஷா, தீபிகா படுகோனேவுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இதைத் தவிர சில படங்களிலும் நடித்துள்ளார். லவ் டுடே, ஒரு கிடாயின் கருணை மனு, வீரமே வாகை சூடும், மாமன்னன், வட்டார வழக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மாமன்னன் மற்றும் லவ் டுடே படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. இவர் தற்போது திருமணம் தயாராகியுள்ளதாக கூறியுள்ளார்.
வாலாட்டி என்ற படத்தை இயக்கிய தேவன் ஜெயக்குமார் என்பவரை காதலித்து வரும் ரவீனா, தற்போது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் மாலை கழுத்துமாக இருந்த போட்டோவை பார்த்து இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என பலர் நினைத்திருந்த நிலையில், தற்போது திருமண அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
This website uses cookies.