திறமையான கதை மூலம் பலரையும் கவர் ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் ஒரு வழியாக தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதித்துள்ளார்.
முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 500 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்னர்.
இந்த நிலையில், மணிரத்தினத்தை பற்றி எல்லோரும் நல்லவிதமாக சொல்லும் நிலையில் ஒரு இயக்குனருக்கு மோசமான ஒரு சம்பவத்தை செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மௌன குரு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சாந்தகுமார் என்பவர்.
இவர் தற்போது வரை சரியாக வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த படபிடிப்பு கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதியில் நடந்துள்ளது. அங்குதான் மணிரத்தினத்திற்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. மணிரத்தினம் அடிக்கடி அங்கு சென்று வருவார்.
அந்த சமயத்தில் இந்த படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது தனது கெஸ்ட் ஹவுஸுக்கு மணிரத்தினம் வந்துள்ளார். அங்கு இருக்கும் படப்பிடிப்பு குழுவிற்கு இந்த விசயம் தெரியாமல் இருந்துள்ளது. படபிடிப்பின் லைட்டிங் வெளிச்சம் வீட்டின் அருகே விழுந்து விட்டது.
இதைப்பற்றி மணிரத்தினம் படப்பிடிப்பு குழுவினரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போலீசுக்கு போன் செய்து என்னை தொந்தரவு செய்கின்றார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டி அடிங்கள் என்று மணிரத்தினம் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசாரம் அங்கு சென்று படபிடிப்பு நடத்தக்கூடாது என்று தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.
சினிமாவில் பழைய இயக்குனர்களில் முன்னோடியாக இருக்கும் மணிரத்னமே இப்படி ஒரு கேவலமான விஷயத்தை அநாகரீகமாக செய்துள்ளார் என்று தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.