விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, சமீபத்தில் இந்த ஷோவில் இருந்து கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிமேகலையிடம், ஏன் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினீர்கள் என கேட்டதற்கு, அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்கிறேன் என்று மட்டும் தெரிவித்துள்ளார். ஆனால் மணிமேகலை வேறு எதுவும் தெரிவிக்க வில்லை.
இதற்கான காரணம் என்ன என்று கூட கூறாமல் நின்றது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனிடையே, தற்போது கணவருடன் சேர்ந்து சொந்த ஊரில் சில தொழில்களை ஆரம்பித்தும், இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளதற்கு மணிமேகலை, நோ, அதெல்லாம் வதந்தி என்றும், தான் கர்ப்பமாக இல்லை எனவும், எந்த செய்தியாக இருந்தாலும் 4 யூடியூப் சேனல்கள் சொல்லி தான் உங்களுக்கு தெரியுற மாதிரி இருக்காது எனவும், நானே சொல்லுவேன் என்று பதிலளித்தார்.
மேலும், தான் இன்னும் விஜய் டிவியில் தான் இருப்பதாகவும், ஏப்ரல் மாதத்தில் சிறப்பு பட்டிமன்றத்தில் தன்னை அடுத்து பார்க்கலாம் என்று மணிமேகலை தெரிவித்து உள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.