90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.
அதன் பின்னர் பாபா , ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியால் தான் எனக்கு சினிமாவில் சறுக்கல் ஏற்பட்டதாக கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் கூறிய அவர் தற்போது, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி என்ற படத்தில் நடித்து வருவதாகவும், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் மீண்டும் இணையப் போகிறேன் என்றும், பிஸியாக இருந்தால் தான் பிரபலமான நடிகையாக அறியப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தானும் அப்படித்தான் பிஸியாக இருப்பதாகவும், ஆனால் அந்த பரபரப்புக்காக தான் செய்த படங்களில் சில மோசமானவை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இப்போது தான் அப்படியில்லை என்றும், தன்னால் இது வேண்டாம் என்று நிராகரிக்க முடிகிறது எனவும், அதுதான் வெற்றி எனக் கருதுவதாகவும், அதுதான் சொகுசு என்றும் புரிந்து கொண்டதாகவும், திரைத்துறை என்பது ஆணாதிக்கம் நிறைந்தது என்றும்,
அதனால் நடிகைகளுக்கு தங்களை நிரூபிக்க குறைந்த அளவிலான வாய்ப்புதான் இருக்கும் எனவும், ஆனால் சஞ்சய் லீலா பன்சாலி ஒரு விதிவிலக்கு என்றும், அவரால் மட்டுமே பெண்களை வைத்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படங்களைக் கொடுக்க முடியும் எனறும், அவருடைய கங்குபாய் கத்தியாவாடி பார்த்து தான் மிரண்டு போனேன் எனத் மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.