எல்லாரும் விட்டு போய்ட்டாங்க… புற்றுநோயால் அவதிப்பட்ட போது – மனிஷா கொய்ராலா உருக்கம்..!

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க: Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!

1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.

அதன் பின்னர் பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. சினிமாவின் உச்சத்தில் இருந்துக்கொண்டிருந்தபோதே மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திரைவாழ்க்கையை இழந்தார். இதனால் சில வருடம் படங்களில் நடிக்காமல் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்.

மேலும் படிக்க: அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

இந்நிலையில், தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அதன் அனுபவங்களை குறித்தும் பேசிய மனிஷா கொய்ராலா, நான் படுக்கையறை காட்சிகளில் நடிக்கவே ரொம்ப தயங்குவேன். அந்த நேரத்தில், அதை மறக்க மது அருந்திவிட்டு தான் நடிப்பேன். அதுவே நாளடைவில் பழக்கம் ஆகிவிட்டது. பின்னர், நான் மதுபோதைக்கு அடிமையாகி விட்டேன். அதனால் தான் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டேன். மது தான் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டது என வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் படிக்க: த்ரிஷாவுக்கே TOUGH கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. அப்படிப்போடு பாடலுக்கு அப்படியொரு குத்து..!(Video)

அதுமட்டுமில்லாமல், இந்த பழக்கம் காரணமாக எனக்கு புற்றுநோய் வந்தது. தற்போது, அதிலிருந்து மீண்டு வந்து நான் மது பழக்கத்திலிருந்து மீண்டு வந்து, தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே மதுப்பழக்கம் எதற்கும் ஒரு தீர்வாகாது என நன்கு புரிந்து கொண்டேன் என பேசியுள்ளார். இதனை அடுத்து, ரசிகர்கள் அனைவரும் மதுவினால் ஏற்படும் தீமையை மிக சிறப்பான முறையில் மனிஷா கொய்ராலா விளக்கி இருப்பது பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என சொல்லி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி அளித்த மனிஷா கொய்ராலா, அனைவரும் அவரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று எனக்கு நிறைய உறவினர்கள் பெரிய குடும்பம் இருந்தது. அனைவரும் வசதியானவர்கள் தான். ஆனால், புற்றுநோய் பாதித்த போது எல்லோரும் விலகிப் போனார்கள். நண்பர்களும் விலகினர். யாருமே என்னை பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும், எல்லோரும் பிரிந்து சென்றாலும், என் பெற்றோர் சகோதர சகோதரரின் மனைவி ஆகியோர்தான் என்னுடன் இருந்தார்கள்.

அந்த சமயத்தில், எனக்கு பல விஷயங்கள் நடந்தது நோய் பாதிப்புக்கு முன் இருந்த மாதிரி தற்போது, என்னால் வேலை செய்ய முடியவில்லை எனவும் இப்போதும் நான் மன அழுத்தத்தோடு தான் வேலை செய்கிறேன் என்று உருக்கமாக நடிகை மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். எனவே, இதுபோல தீய பழக்கங்களில் தன்னை செலுத்தி வரும் இளைஞர்கள் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை முன் உதாரணமாக கொண்டால் கட்டாயம் இது போன்ற கெட்ட நடவடிக்கைகளில் இருந்து வெளியே வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யலாம்.

Poorni

Recent Posts

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

6 minutes ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

40 minutes ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

42 minutes ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

2 hours ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

13 hours ago

This website uses cookies.