தமிழ் சினிமா எதிர்பாக்காத ஒரு விஷயத்தை நடிகர் விஜய் அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் அரசியலில் களமிறங்குவது அனைவருக்கும் சந்தோஷமான விஷயம் தான். ஆனால், தனது 69 ஆவது படத்திற்கு பிறகு இனி நடிக்க மாட்டேன் என அவர் கூறி இருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.
இப்போது, நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து பிரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும், அதனை தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மாமன்னன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இப்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் படமாகும். சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசுகையில், சிறுவயதிலிருந்தே நான் விஜயின் தீவிரமான ரசிகர். மன்றம் எல்லாம் வைத்திருக்கிறேன். அவர் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்று பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
This website uses cookies.