ஏய் ஆதிவாசி அடக்கிவாசி… திடீரென கோபப்பட்ட மாரி முத்து- கடுப்பான ஜோசியர்கள் – சிரிப்பு அடக்கமுடியலப்பா !

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஆணவம், அகங்காரம் என பெண்களை அடிக்கு,அடிமைகளாக நடித்தும் ஆண்களை போன்று நடித்துள்ளார்.

இந்த சீரியலின் மாபெரும் வெற்றிக்கு மாரிமுத்து ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். இந்த சீரியலை கோலங்கள் தொடரை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்க்க கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் நேரம் பார்த்து காத்திருந்து பார்க்கிறார்களாம்.

ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்றும் அவர்களிடம் இருந்து பெண்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதே இந்த தொடரின் கதை. இதில் ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியுள்ள மரிமுத்துவை பல யூடியூப் சேனல்கள் தொடர்ந்து பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில் சமீபத்தியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மாரிமுத்து, ஜோஷியர்கள் சொல்வது எதுவுமே நடக்கவில்லை. எதையும் அவர்கள் முன்கூட்டி சொல்வேதே கிடையாது. 2004ல் சுனாமி வரும்னு எந்த ஜோஷியனாவது சொன்னானா? எந்த ஜோஷியனாவது 2015ல் சென்னை வெள்ளத்தில் மூழ்கும்னு சொன்னானா? எந்த ஜோஷியாவானது கொரோனா வரும்னு முன்னாடியே சொன்னா? இல்லை…, வந்த பிறகு தான் அவன் அவன் கதை உருட்டுறான்.

குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர், முதலமைச்சர் ஆகவே முடியாது என்று பல ஜோதிடர்கள் சொன்னார்களே இப்போ அந்த ஜோதிடர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? ரஜினிகாந்த் பிறந்த அதே நிமிஷத்தில் 57 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருக்கு. ஆனால் ரஜினி மட்டும் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனாரு. இதை யாராச்சும் கேட்டீங்களா? என கேட்டு அரங்கத்தையே அதிரவைத்தார். அப்போது குறுக்கிட்ட ஓரிரு ஜோசியர், ” நான் சொல்வது நடக்கலைன்னா ரூ.2 கோடி சொத்து எழுதி தரேன் ஒருவேளை நடந்துவிட்டால் நீங்க எழுதி தரீங்களா? என கேட்க அங்கிருந்த அனைவரும் குலுங்க குலுங்க சிரித்துவிட்டார். சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த எபிசோடை நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர் .

Ramya Shree

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

5 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

6 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

8 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

8 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

9 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

10 hours ago

This website uses cookies.