பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். இதனிடையே நடிகர் மாரிமுத்து சீரியல் ஒன்றிற்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார். அவரின் இந்த திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
அவரது ரசிகர்களால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில் அவரது மரணத்திற்கு காரணம் அவர் சாமியை நம்பாததும், ஜோஷியர்களை எதிர்த்து பேசியதும் தான் என பலர் கட்டுக்கதைகள் காட்டுகிறார்கள். அப்படித்தான் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்,
மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள், தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களை பற்றியும் ஜோதிடத்தை பற்றியும் விமர்சனம் செய்து பேசியதால் தான் அவருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு விட்டது என்று கூறி விமர்சித்தார். இதுகுறித்து மாரிமுத்துவின் தம்பி, இதுபோன்ற விமர்சனங்கள் மிகுந்த மனவேதனை கொடுக்கிறது.
அண்ணன் மட்டுமல்ல நானும் தான் சொல்கிறேன் சாமி இல்லை என்று அப்போ என்னையும் கொல்லட்டும் பார்ப்போம். ஒரு கலைஞனை கலைஞனனே இப்படி எல்லாம் பேசலாமா? உயிரோடு இருக்கும்போது அவர்கிட்ட மோதிப் பாருங்க. அதைவிட்டுவிட்டு அவர் இறந்த பிறகு அது அந்த சாமியாரை பற்றி பேசுனதுனால தான் அந்த சாமி வந்து கொன்னுடுச்சுன்னு சொன்னா அது எவ்வளவு கேவலம் என மாரிமுத்துவின் தம்பி பேசியிருந்தார்.
மேலும், இதுகுறித்து மாரிமுத்துவின் மகன் பேசியுள்ளதாவது, ” என்னுடைய அப்பா சாமி இல்லை என்று சொன்னதால்தான் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி என்றால் அது போன்ற விவாதத்தில் பேச நானும் தயாராக இருக்கிறேன். தயவு செய்து இறந்த ஒருவரை பற்றி இதுபோன்று பேசுவது ரொம்பவே தவறு. காசுக்காக அவரைப் பற்றி பேசுவதால் அவருடைய ஆத்மா வேதனைக்கொள்ளும். தயவுசெய்து இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கட்டமாக பேசியுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.