சினிமா உலகில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நடிகையாக சிகரம் தொட்டவர். உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், அஜித், விஜய், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மீனா 40 ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக உள்ளார், இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளாக நடிகை மீனா சினிமாவில் சாதனை படைத்ததை கவுரவிக்கும் விதமாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா 40 என்று தலைப்பில் விழா எடுத்தது.
இதில் முன்னணி நடிகர் நடிகைகள் பலர் பங்கேற்றனர். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், போனி கபூர் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி குறித்தும் நடிகை மீனா குறித்தும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகை மீனா படையப்பா படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம்.
இதை அவரே பல முறை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இதனை ரஜினிகாந்தும் மீனா 40 நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். ஆனால், நீலாம்பரி கதாப்பாத்திரம் வில்லி வேடம் என்பதால் அது மீனாவுக்கு சரியாக வராது என நடிகர் ரஜினிகாந்த், மற்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் மீனாவின் அம்மா ஆகியோர் தெரிவித்து நடிகை மீனாவை சமாதானப்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: காதலில் சொதப்பி… 4 நடிகைகளை டீலில் விட்டு அடங்கிய 44 வயது பிளேபாய் நடிகர்..!
முன்னதாக இதுகுறித்து பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். அதாவது மீனாவுக்கு எப்படி நடித்தாலும் வில்லத்தனம் வரவே வராது என்றும், மீனாவின் கண்களும் அவரது நடிப்பும் குழந்தைத்தனமாக இருக்கும் என்றும் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
மேலும், படையப்பா படம் மட்டும் இல்லை, வேறு எந்த படமாக இருந்தாலும் நடிகை மீனாவுக்கு நெகட்டிவ் ரோல் சுத்தமாக செட்டாகாது என்று கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மீனா படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்தார். நடிகை மீனா கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை, அவ்வை ஷண்முகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.