சினிமா / TV

ஆடு என விமர்சித்த மீனா.. யாரை தெரியுமா? போட்டுடைத்த பத்திரிகையாளர்.!!

மீனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஏராளமான ஆடுகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “சிங்கம் ஆடுகள் தன்னைப் பற்றி என்ன நினைக்கின்றன என்பதைப் பற்றி கவலைப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், King Voice சேனலுக்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முதலில் நயன்தாரா இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், பின்னர் சுந்தர் சி, நயன்தாராவே நடித்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினார். அதை தயாரிப்பாளர் ஐசரி கணேசும் ஏற்றுக்கொண்டார்.

இதையும் படியுங்க: டிரெண்டிங் ஆன ‘அண்ணன பாத்தியா’ பாடல்..ரீல்ஸ் எடுத்து வைப் செய்யும் பிரபலங்கள்.!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டு படங்கள் வெற்றி பெற்றவுடன், நயன்தாரா தனது மதிப்பு உயர்ந்துவிட்டதாக எண்ணத் தொடங்கினார். ஹீரோ இல்லாமலேயே தனது படங்கள் வெற்றி பெறுவதால், இயல்பாகவே ஒரு தன்னம்பிக்கை, சில சமயங்களில் திமிரும் வரலாம்.

இருப்பினும், நயன்தாரா காலத்தில் அவர் நம்பர் 1 என்றால், மீனா காலத்தில் மீனாவே நம்பர் 1 ஆக இருந்தார். ஆனால், மீனா இப்படியொரு இன்ஸ்டா பதிவை ஏன் போட்டார் என்று புரியவில்லை,” என்றார்.

மேலும் அவர், “ஆடுகள் என்று யாரைக் குறிப்பிட்டாலும், அது மிகவும் தரக்குறைவான சொல். ஆடுகளுக்கு சிந்திக்கும் திறன் இல்லை. ஒரு ஆடு எங்கு செல்கிறதோ, மற்றவையும் அதைப் பின்பற்றும். பசுமையான தாவரங்களைப் பார்த்தால், இப்போது மேயும் இடத்தை விட்டுவிட்டு அங்கு ஓடிவிடும். நுனிப்புல் மேய்வதுதான் ஆடுகளின் பழக்கம். அதனால், ‘ஆடுகள்’ என்று குறிப்பிட்டு மீனா மிகவும் ஆழமான ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்,” என்று விளக்கினார்.

அதேபோல், “லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு யார் கொடுத்தது என்பது பத்திரிகையாளர்களுக்கே தெரியாது. அவரை புகழ்ந்து பேச யாரோ ஒரு இயக்குநர் அதை சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தாலும், நயன்தாரா அதை ஏற்காமல் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை முதலில் பெற்றவர் விஜயசாந்தி. அவர் இன்னும் உயிருடன் இருக்கும்போது, நயன்தாரா எப்படி அந்த பட்டத்தை தனதாக்க முடியும்? ‘நீயா லேடி சூப்பர் ஸ்டார்?’ என்று அனைவரும் கேலி செய்ததால்தான், ஒருவேளை அவர் அந்த பட்டத்தை விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கலாம்,” என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

துபாயில் ரகசிய நகைக்கடை…பலே நெட்ஒர்க்கில் நடிகை ரன்யா ராவ்.!

கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையும்…

45 minutes ago

என் ஆடையை கழட்ட சொன்னாங்க..பிரபல தொகுப்பாளர் DD சொன்ன அதிர்ச்சி தகவல்.!

நிகழ்ச்சியில் நேர்ந்த மோசமான அனுபவம் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி,காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பெரும் புகழைப்…

2 hours ago

ஈரோடு ஹைவேயில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை.. 3 பேர் சுட்டுப்பிடிப்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஈரோடு நெடுஞ்சாலையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். ஈரோடு: சேலம்…

2 hours ago

அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!

விசில் போடு – CSK-வின் அடையாளம் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத்,தொடர்ந்து பல ஹிட் பாடல்களை…

2 hours ago

அண்ணாமலைக்கும், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் என்ன வித்தியாசம்? கொந்தளித்த தவெக!

அண்ணாமலை தொடர்ச்சியாக அனைவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார் என தவெக ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக தமிழக…

3 hours ago

அஜித்துடன் இணையும் ‘டாக்டர்’ பட பிரபலம்…முக்கிய ரோலில் மிரட்டல்.!

அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் - ரகுராம் பகிர்வு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,அஜித் நடித்துள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் இறுதிக்கட்டத்தை…

4 hours ago

This website uses cookies.