90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை தனது கண்களால் உருவாக்கியவர்.
தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.
இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீனா தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் நடிகை மீனா, “தனக்கு ஹ்ரித்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும் என்றும், தன்னுடைய திருமணத்திற்கு முன்பு தன் அம்மாவிடம், தனக்கு ஹ்ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளையை பாருங்க என்று தான் கூறியதாகவும், தான் ஹ்ரித்திக் ரோஷனின் மிக பெரிய ரசிகை என்றும், அவரின் நடிப்பு, நடனம் எல்லாமே நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு பின் அவர் இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என சிலர் வதந்திகளை பரப்பி வரும் நிலையில், அதில் உன்மை இல்லை என மீனா தரப்பு முன்பே விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.