கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அமரன்.
இந்த திரைப்படம் தீபாவளி தினத்தின் ஸ்பெஷல் ஆக ரிலீஸ் ஆகியது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீர்த்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது அனைவருக்குமே தெரியும்.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்தது. மேலும் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் நடிப்பும் படத்தின் பிரமோஷனும் படத்தை பார்க்க வேண்டும் என மக்களுக்கு ஆர்வத்தை அதிகரித்தது.
படம் வெளியான பின்னரும் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் மறைந்த மேஜர் முக்குந்த் தந்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்தும் தனது மகனின் மரணம் குறித்து பல விஷயங்களை மிகவும் எமோஷனலாக பகிர்ந்து கொண்டார்.
அப்போது என்னுடைய மருமகள் இந்து ரொம்ப பாவம்.. நான் சொன்னா நம்ப மாட்டீங்க. நான் அவளை திரும்ப கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொன்னேன். இந்துவோட அப்பா கிட்ட… சார் இப்போ 31 வயசு தான் ஆகுது இந்துவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம் அப்படின்னு நான் சொன்னேன்.
அப்போ இந்து உடனே என்கிட்ட… அப்பா நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா? நோ… அப்படின்னு சொன்னா! அது ரொம்ப பெருமைக்குரிய விஷயம். ஆனால், ஜனங்கள் பேசுவது காதல் வாங்கும்போது கொஞ்சம் வேதனையா தான் இருக்கு என மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை கண்ணீர் மல்க அந்த பேட்டியில் கூறி இருந்தார் .
அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக நாட்டுக்காக மேஜர் முகுந்த் உயிர் தியாகம் செய்திருக்கும் நிலையில் அவரது மனைவி முகுந்திற்காக எவ்வளவு சேக்ரிஃபைஸ் பண்ணி இருக்கிறார் என்பது மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் அவரை பெருமைப்படவும் வைத்திருக்கிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.