நாளைய தீர்ப்பு விஜயகாந்த் மற்றும் விஜய் நடிக்க எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் வெளிவந்த திரைப்படம். மணிமேகலையின் இசையில் பாடல்கள் வெளிவந்தது.இது விஜய்யின் முதல் திரைப்படம்.
மணிமேகலை இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க தேர்ந்தெடுக்க பட்ட போது அவருக்கு வயது 12.அவருடைய முழுப்பெயர் மணிமேகலை ஶ்ரீ லேகா இவர் தெலுங்கின் முன்னணி இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி மற்றும் தமிழில் மரகதமணி யாக அறியப்பட்ட எம் எம் கீரவாணி ஆகியோருக்கு உறவினர்.2022 ஆம் ஆண்டு இவர் இசையில் ஹிட்: த செகண்ட் கேஸ் திரைப்படம் வெளிவந்து கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றது.
அவர் இந்திய தெலுங்கு திரைப்படத் துறையில் இருக்கும் ஒரே பெண் இசையமைப்பாளர்.இசைத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் எம் எம் ஶ்ரீ லேகா.
அவரது தந்தைவழி மாமா வி விஜயேந்திர பிரசாத் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.
தனது திரை அறிமுகம் பற்றி குறிப்பிடும் போது என் மாமா விஜயேந்திர பிரசாத் அவர் எங்கு சென்றாலும், நான் அவருடன் செல்வது வழக்கம்.ஒரு நாள் அவர் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதை சொல்லச் சென்று கொண்டிருந்தார், நான் என்னுடைய கீபோர்டை எடுத்துக்கொண்டு அவருடன் சென்றேன். என் மாமா தனது கதையை விவரித்த பிறகு, அங்கு இருந்த திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், என்னைப் பற்றி விசாரித்தனர். என்னுடைய இசைத்திறனை சோதிக்க என்னிடமிருந்து ஒரு பாடலைக் கேட்க அவர்கள் விரும்பினர்கள். அன்று நான் 20 பாடல்களைப் பாட வேண்டியிருந்தது.
‘நாளைய தீர்ப்பு’ (1992) படத்தின் மூலம் இயக்குனர் தனது மகனான விஜய் அவர்களையும் முன்னணி நடிகராக அறிமுகப்படுத்த எண்ணியிருந்தார். என்னுடைய அறிமுகமும் அந்த படத்தில் நிகழ்ந்தது என சொன்னார்.
8 வயதில் ஶ்ரீ லேகா இசையமைத்த ஒரு பாடல் சிரஞ்சீவி மற்றும் ஶ்ரீதேவி இணைந்து நடித்த எஸ் பி பரசுராம் படத்தில் பயன்படுத்தப் பட்டது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.