80 வயசு மாமியாரின் அந்த ஆசையை நிறைவேற்றிய குஷ்பு – இருந்தாலும் இப்படியா?
Author: Shree8 June 2023, 5:46 pm
தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது குஷ்பு தனது 80 வயது மாமியாரின் பல வருட கனவு, ஆசையாய் நிறைவேற்றி வைத்திருக்கிறார். ஆம், குஷ்புவின் மாமியார் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகையாம். எந்த அளவுக்கு என்றால் தான் இறப்பதற்கு முன் அவரை பார்த்து விடவேண்டும் இல்லையெனில் ஆவியாக வந்து தொந்தரவு செய்வேன். என குஷ்புவை மிரட்டினாராம். அவரின் ஆசையை நன்றாக புரிந்துக்கொண்ட குஷ்பு அதற்காக கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி எடுத்து அண்மையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு தன் மாமியாரை அழைத்துச்சென்று சந்திக்க வைத்தாராம். அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு” என நடிகை குஷ்பூ நெகிழ்ந்துள்ளார்.