யாரும் இல்லாத பெண்கள் தான் டார்க்கெட்.. ரத்தம் வந்தாலும் விடமாட்டான்… சீரியல் நடிகையின் கண்ணீர் பேட்டி..!

திரைத்துறையை பொறுத்தவரை பல வருடங்கள் காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்ட நட்சத்திரங்களே பல வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணம், வாழ்க்கை , விவாகரத்து எல்லாம் சாதாரண பிரச்சனை போல் மாறிவிட்டது.

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைத்தன்யா போன்ற பிரபல ஜோடிகளின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவர்கள் எல்லோரும் இருவருமாக சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை பற்றி பெரிதுபடுத்திக்கொள்ளாமல் தங்களது வாழ்க்கையிலும் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு படி மேலே சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோ ஷூட்நடத்தி கொண்டாடியுள்ளார். அதில் கணவருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை கிழிப்பது, காலில் போட்டு மிதத்தல் , மது அருந்தியபடி தனக்கு டைவர்ஸ் கிடைத்ததை மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது. முள்ளும் மலரும் தொடர் மூலம் பாப்புலர் ஆன ஷாலினி சூப்பர் மாம் உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக்கொண்டு இருக்கிறார். அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலினி தனது திருமணம் குறித்து பேசி உள்ளார். அதில் தனக்கு வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் மூன்று மாதத்தில் உறவு முறிந்து விட்டது என்றும், அதைப்பற்றி பேச வேண்டாம் என்றும், தான் தொடர்ந்து மீடியாவில் தான் இருந்து வருவதாகவும், 2016 ல் ஜோடி நம்பர் ஒன் ஷோவில் தான் பங்கேற்ற நேரத்தில் துபாக்கு சென்ற சமயத்தில், ரியாஸ் பழக்கமானதாகவும், அவர் முஸ்லிம் தான் ஆனால் திருவேற்காட்டில் இந்து முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஒன்றை ஆண்டுகளுக்கு பின் தான் கர்ப்பமானதாகவும், அதற்கு முன்பே தன்னை கொடுமைப்படுத்த தொடங்கி விட்டதாகவும், அதற்கான காரணம் எல்லாம் சைக்கோ தனமாக இருக்கும் என்றும், போனை தவறவிட்டு ஒருவர் அதை எடுத்து வந்து தரும்போது அவருக்கு நன்றி கூறினால் இரண்டு நாட்கள் தன்னை அடித்து துன்புருத்தியதாகவும்,

மது அருந்த சொல்லி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், அப்போது தூங்கிவிட்ட நிலையில் தன்மேல் தண்ணீரை ஊற்றி நீ மட்டும் நல்லா தூங்குறியானு கேட்டு அதற்கும், அடிச்ச அடியில தன் தலையில் ரத்தம் வந்துவிட்டதாகவும், ரத்தம் வந்தாலும் விடாமல் இரத்தம் வர அளவுக்கு தன்னை அடிக்கவச்சிட்டுயேன்னு சொல்லி அதற்கும் பயங்கரமாக அடித்ததாகவும், அவரைப் பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு நல்லவன் மாதிரி இருப்பார் என்றும், தினமும் அடிவாங்கி கஷ்டப்பட்டதால்தான் விவாகரத்தை கூட போட்டோ சூட் ஆக நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

ரியாசுக்கு சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தன்னையும் தன் குழந்தையும் கண்டுகொள்ளவில்லை என்றும், 2010ல் இருந்து வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததாகவும், அப்போது இவருக்கு கல்யாணம் ஆகவில்லை அப்பா இல்லாத மற்றும் யாரும் இல்லாத பெண்களாக பார்த்து அவர்களை அடைந்திருக்கிறார் என்று தனக்கு தெரிய வந்ததாகவும், தனக்குத் தெரிந்து நாலு பேர் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும், தன்னைப் பொறுத்தவரை தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும். இனிமேல் இந்த மாதிரியான நபர்களை மற்றவர்கள் ஏமாற்றுவதை தான் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும், முதல் மனைவி இருக்கும் நபரை யாரும் கல்யாணம் பண்ணிக்காதீங்க விவாகரத்து பண்ணிட்டாங்களா என்பதை தெளிவாக தெரிந்த பின் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அந்த பேட்டியில் ஷாலினி தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

3 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

3 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

4 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

5 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

5 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

5 hours ago

This website uses cookies.