மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது இசையமைப்பாளர் இளையராஜா திடீரென கடுப்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
34வது அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலாக அரங்கத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியை இசையமைப்பாளரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் ரமா மேத்யூ (மறைமுக வரிகள் மற்றும் மத்திய வாரியம்), மண்டலிகா ஸ்ரீனிவாஸ் central excise தமிழ்நாடு மண்டலத்தின் முதன்மை ஆணையர் கலந்து கொண்டனர்.
34வது அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சியை (ஜனனி ஜனனி ஜகம் நீ) என்னும் தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பாடி நிகழ்ச்சியை இளையராஜா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு சிற்பிக்கு எவ்வாறு தேவையில்லாத பாகங்களை நீக்கினால் மட்டுமே அதன் சிலை உருவாகுமோ.., அதுபோல தேவையில்லாத தட்டுகளை நீக்கினால், மட்டுமே முறையான தாளம் உருவாகும், என்றார், அதுபோல தன்னைப் பற்றி வரும் அவதூறு பேச்சுகளை நான் ஒருபோதும்கண்டு கொள்வதில்லை எனக் கூறினார்.
மேலும், உங்கள் அனைவரும் என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறிய அவர், தனது ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் ரெக்கார்டிங்கை போன் கால் மூலமாக கேட்க வைத்தார். இப்போது உங்கள் அனைவரும் எனது ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது, என அவர் கூறினார்.
முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜனனி ஜனனி பாடலை பாடும் போது, மேடைக்கு அருகே இருந்த ஒருவர், பாடுவதை குறுக்கிடுவது போல கத்தினார். இதனால், கடுப்பான இளையராஜா, அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் தொடர்ந்து பாடலை பாடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.