சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்ட அவருக்கு தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி’ திரைப்படம் புகழை தேடி தந்தது.
மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.
பின்னர் இதன் பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று பாவனா கூறியதன் அடிப்படையில் போலீசார் நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? சினிமா துறையில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர்.
அதன் பின்னர் பல வருட இடைவெளிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனர் மிஷ்கினால் தமிழில் அறிமுகமான பாவனா உடன் இயக்குனர் மிஸ்கின் தகாத உடலுறவு வைத்திருந்ததாக கூறி அதிர வைத்துள்ளார்.
ஆம், சித்திரம் பேசுதடி படம் வந்த புதிதில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மிஷ்கின் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு மாணவர், ” இந்த திரைப்படத்தின் மூலம் நீங்கள் என்ன சந்தோஷம் அடைந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, ” நான் பாவனா உடன் இருந்த அந்தரங்க உறவு தான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு அப்போதே ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளது. அப்போ திரைப்படங்களில் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் நடப்பதெல்லாம் உண்மைதான் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
நடிக்க வந்தாலே ஒரு நடிகை எல்லாருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற வக்கிர புத்தி இருக்கும் சிலரில் மிஷ்கினும் உள்ளார் என்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இதனை சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் வெளிப்படையாக போட்டு உடைத்து பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.