ரெண்டு பேர் கூட நடந்து இருக்கு.. தடுமாறிப்பேசிய நாகசைதன்யா.. ஒருவேளை அதுவா இருக்குமோ?..

Author: Vignesh
20 ஜூலை 2024, 4:34 மணி
Quick Share

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

samantha

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

naga chaitanya-updatenews360

விவாகரத்து ஆகி 3 வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், சமந்தாவின் வீட்டில் மறுமணம் செய்துக்கொள்ள கூறி வருகிறார்களாம் அவரது பெற்றோர்கள். இதனால் சமந்தா விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், சமந்தாவை போலவே நடிகர் நாகசைதன்யாவுக்கு அவரது தந்தை நாகார்ஜூனா மறுமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தனது உறவுக்கார பெண் ஒருவரை பார்த்து வைத்துள்ளதாகவும் விரைவில் திருமண அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே கூடிய சீக்கிரத்தில் சமந்தா – நாகசைதன்யா ஜோடிக்கு விரைவில் மறுமணம் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

naga chaitanya

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நாகசைதன்யாவிடம் ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் நாகசைதன்யா எப்போதாவது இரண்டுமுறை ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் நான் இரண்டு பேரை காதலிச்சேன். அதில், ஒரு காதலில் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். அந்த அனுபவங்கள் தான் வாழ்க்கையில் வளர உதவியது. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் எனக்கு எல்லா அனுபவங்களும் இருக்கிறது. இப்போது, அதில் இருந்து மீண்டு இருக்கிறேன் என்று தயங்கி தயங்கி தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அந்த மாதிரி சம்பவம் ஏதோ நடந்திருக்குமே, அதனால் தான் இவ்வளவு தயங்குறாரோ என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 128

    0

    0