பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அதன்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுடன் ஷோபிதா அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இருவரும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திருமண புகைப்படங்கள் இல்லையாம். அது விளம்பரத்திற்காக அவர் பதிவிட்ட பதிவாம்.
இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் ஷோபிதாவிற்கு நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டது என்று எண்ணியதாக அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ நாக சைதன்யாவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேட்டு அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.