தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.
இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் நாக சைதன்யா ரூ. 15 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக நம் இணையதள செய்தியில் பார்த்தோம். தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின் படி அந்த வீடு சமந்தா வீட்டின் அருகிலேயே தான் இருக்கிறதாம்.
இதை அறிந்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாக சைதனையாவுக்கு சமந்தா மீது இருக்கும் காதால் இன்னும் அப்படியே தான் இருக்கு. அவரை அருகில் இருந்தது பார்ப்பதற்காக தான் சமந்தா வீடு பக்கத்திலே வீடு வாங்கிருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
அதுமட்டும் அல்லாமல் விவாகரத்து ஆன பிறகு கூட நாக சைதன்யா இன்னுமும் சமந்தா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கவே இல்லை என்பது அவர்கள் காதல் இன்னுமும் வாழ்வதற்கு அடையாளம். அதனால் இருவரது ரசிகர்களும் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என நம்பியுள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.