பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2025, 2:42 pm
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.
இதையும் படியுங்க: மீனாவுடன் மீண்டும் காதல்? கெட் டூ கெதரால் வந்த வினை!
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருவர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள், பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த நிலையில் சோபிதாவின் திருமணத்திற்கு பின் நாகசைதன்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிவதாகவும், நல்ல நல்ல கதைகள் வருவதால் நாகர்ஜூனா குடும்பம் சோபிதாவை பாராட்டி வருகிறதாம்.

இந்த பாராட்டுகளை நிலைத்து வைக்க வேண்டிய கடமை சோபிதாவுக்கு உள்ளதால், இனி முத்தக்காட்சி,நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.
மேலும் கவர்ச்சி காட்சிகள் வந்தால் உடனே அந்த படத்தையே ரிஜக்ட் செய்கிறாராம் சோபிதா. சமந்தா கவர்ச்சி காட்சிகளில் நடித்ததால்தான் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து ஆனதை என்பதை அம்மணி நன்றாக புரிந்து கொண்டுள்ளார். பொழக்க தெரிந்த பொண்ணு என ரசிகர்கள் சோபிதாவை புகழ்ந்து வருகின்றனர்.