கூலி படத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்?.. லோகேஷ் போட்ட பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட பிரபலம்..!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது, வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்திருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கண்டிப்பாக இந்த படம் மெகா ஹிட் ஆகும் என அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கமலஹாசனுக்கு விக்ரம் என்ற படத்தை மெகா ஹிட் ஆக கொடுத்தது போல் கூலி படத்தையும் லோகேஷ் மெகா ஹிட் படமாக கொடுப்பார் என்று ரசிகர்களும் குஷியில் உள்ளனர். முன்னதாக, லோகேஷ் இயக்கிய படங்களிலே லியோ படம் தான் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், லியோவில் விட்டதை கூலியில் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் லோகேஷ் செயல்பட்டு வருவதாகவும், இதற்கிடையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஷாருக்கான், ரன்பீர் சிங் உள்ளிட்டோரிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவுடன் பேசியதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்நிலையில், புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் கசிந்து உள்ளது.

அதாவது, கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நாகர்ஜுனா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யாரை வில்லனாக போடலாம் என்ற அடுத்த கட்ட யோசனையில் லோகேஷ் இருக்கிறாராம்.

Poorni

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

19 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

30 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

2 hours ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.