கொலை வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்.. காப்பாற்றிய MGR; சீக்ரெட்டை வெளியிட்ட பிரபலம்..!(வீடியோ)

காமெடி மன்னன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் நாகேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து காலத்தால் அழியாத நடிகராக, தனது முத்திரையை படைத்தார். மேலும் துணை நடிகர், வில்லனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதுவரை சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் போன்றே இருப்பதாக பரவலான கருத்து நிலவி வருகிறது. தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா, சிம்பு, அஜித் வரை 5 தலைமுறை நடிகர்களுக்கும் தனது நடிப்பின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நாகேஷ். அந்த காலத்திலே B.sc பட்டப்படிப்பு படித்துள்ள நாகேஷ் கல்லூரி முடித்ததும் தனது தந்தை வேலைபார்த்த இரயில்வே துறையில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு நாகேஷ் குறித்த பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ, தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மிகவும் கஷ்டப்பட்டு தான் நாகேஷ் சினிமாவில் நுழைந்ததாகவும், நாகேஷின் நடிப்பு திறமையை கவனித்த கே பாலச்சந்தர் தொடர்ந்து அவரை தனது படங்களில் நடிக்க வைத்தார்.

சர்வர் சுந்தரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக நாகேஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஒரே சமயத்தில் பல படங்களிலும் நடித்து வந்தார். தொடர்ந்து ஓய்வு இல்லாமல், படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு பக்கம் சினிமாவில் பிசி மறுபக்கம் மது பழக்கம் இப்படி இருக்கும் சூழ்நிலையில், நாகேஷ் குடும்பத்தை கவனிக்க தவறிவிட்டார்.

நாகேஷின் மனைவி மர்மமான முறையில் இறந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த பிரச்சனையில், இருந்த நாகேஷை எம்ஜிஆர் தான் காப்பாற்றினார் என்று ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்னிடம் கூறியிருந்தார். சினிமாவை தாண்டி நாகேஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் கர்வம் பிடித்தவராக தான் இருப்பார் என்றும், பல பிரபலங்கள் முன்னதாகவே கூறியிருந்தார்கள்.

மேலும், நாகேஷ் பள்ளிக்கூடம் அருகே திரையரங்கு ஒன்றைக் கட்டி அந்த திரையரங்கிற்கு NOC கொடுக்கவில்லை. அது பிரச்சினையாக மாறியது. அந்த சமயத்தில் எம்ஜிஆர் தான் NOC வாங்கி கொடுத்தார். நாகேஷ் தியேட்டர் என்றாலே பிரபலம். இப்பொழுது கல்யாண மண்டபமாக மாற்றிவிட்டனர் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Poorni

Recent Posts

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

1 hour ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

1 hour ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

2 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

2 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

3 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

3 hours ago

This website uses cookies.