பிரபல இயக்குனர் அமீர் சமீபத்தில் சூர்யா, கார்த்திக், சிவகுமார் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பற்றி சர்ச்சையாக பேசிய விஷயம் இணையதளத்தில் வைரலானது. ஞானவேல் ராஜா அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் அமீரின் சுயரூபங்களை தற்போது, வெட்ட வெளிச்சமாக்கி கொண்டு வருகிறார்கள்.
அதாவது 2016 ஆம் ஆண்டு அமீர் எங்களை தரக்குறைவாக பேசியது குறித்து நாங்கள் வாய் திறக்காமல் இருக்கிறோம். அமைதியாக இருக்க காரணம் சிவகுமார் சார் தான் அமீர் இப்படி பேசுவது குறித்து அவரிடம் கூறியதும், நீயும் சினிமாவில் இருக்க போற அமீரும் சினிமாவில் இருக்கப் போறான்.
அவரை தப்பா பேசாதே இருவரும் யார் நல்லவர்கள் என யாரிடமும் நிரூபிக்க போகிறீர்கள் உன் இயக்குனரை எங்கும் காயப்படுத்தி பேசிவிடாதே என்று கூறினார். தற்போது, பருத்திவீரன் படம் வெளியாகி பதினாறு ஆண்டுகளானதால் பருத்திவீரன் படத்தை ரீரிலிஸ் செய்தோம். அப்போது, அமீரிடம் எட்டு மணி நேரம் பேசினார். ஆறு மணி நேரம் என்னை திட்டியும், குடும்பத்தை திட்டியும் பேசினார்.
நான் ஒரே ஒரு கேள்வி கேட்டேன். நான் சூர்யா, கார்த்திக், சிவகுமார் எல்லோரும் கெட்டவர்கள். ஆனால், இன்றும் எங்களால் சினிமாவில் இருக்க முடியும். உங்களை எல்லோரும் பார்த்து தெரிந்து ஓடுகிறார்கள் என்று கேட்டதாகவும் கூறினார். மேலும், சூர்யாவை நந்தா படத்தில் கேவலமாக நடத்தினார் அமீர். சண்டை முற்றிப் போய் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனதாகவும், இசை வெளியீட்டு விழாவிற்கு கூட சூர்யா வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சண்டை போட்ட சூர்யா அண்ணவையே, அவர் கொச்சைப்படுத்தியதாக ஞானவேல் ராஜா பேசியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.