இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால் அவருடன் பணியாற்றிய பலரும் பாலா மிகவும் மென்மையானவர் என்று கூறுகின்றனர். “பரதேசி” திரைப்படத்தின் போது அத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்களை பாலா கம்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோதான் இது போன்ற பேச்சுக்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “பரதேசி” பட ஆர்ட் டைரக்டர் சி.எஸ்.பாலச்சந்தர் அந்த வீடியோ குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “பரதேசி” திரைப்படத்திற்கு ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைப்பதாக இருந்ததாம். ஆனால் பாலா நடிகர்களை அடிப்பது மாதிரியாக வெளியான வீடியோவால் அந்த தேசிய விருதுகள் பறிபோனது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “நடிகர்களை பாலாவை போல் பார்த்துக்கொள்பவர்கள் வேறு யாரும் இல்லை. கம்பால் அடிப்பது போன்ற காட்சியை படமாக்குவதற்கு முன்னால் அந்த டம்மியான கம்பை கொண்டு அவரையே அடித்துப்பார்த்துக்கொள்வார் தனக்கு வலிக்கிறதா இல்லையா என்று. அந்தளவுக்கு கவனத்தோடு இருப்பார். ஆனால் அவர் தன்னை ஏன் கறார் தன்மை கொண்டவர் என்று வெளியே காட்டிக்கொள்கிறார் என்று தெரியவில்லை” என சி.எஸ். பாலச்சந்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
This website uses cookies.